search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே பெண்ணை தாக்கி நகை-பணம் பறிப்பு
    X

    திருமங்கலம் அருகே பெண்ணை தாக்கி நகை-பணம் பறிப்பு

    திருமங்கலம் அருகே முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கி வீட்டில் இருந்த நகை-பணத்தை திருடிச் சென்றதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள புங்கன்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி ஜெயபாண்டி (வயது 39). இவர் அதே ஊரைச் சேர்ந்த ஆட்டுக்கறி வியாபாரி மொக்கராஜுடம் கறி வாங்கினாராம். அதற்கான பணத்தை கொடுப்பதில் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.

    இந்த விரோதத்தில் மொக்கராஜ், அவரது மனைவி பாப்பு, மகன் சரவணன், உறவினர்கள் பிரேமா, அங்கயற்கண்ணி, சிவனம்மாள் ஆகியோர் ஜெயபாண்டி வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

    அவர்கள் தன்னை தாக்கியதோடு, வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 65 ஆயிரத்தை எடுத்துச் சென்று விட்டதாக திருமங்கலம் தாலுகா போலீசில் ஜெயபாண்டி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மொக்கராஜ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Tamilnews
    Next Story
    ×