search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தமபாளையம் அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவன்
    X

    உத்தமபாளையம் அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவன்

    உத்தமபாளையம் அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    உத்தமபாளையம் அருகே ஆனைமலையான்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவருடைய மனைவி ரேணுகாதேவி(வயது23). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் ரேணுகாதேவி கோவித்துக்கொண்டு அதேஊரில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    சம்பவத்தன்று அங்கு சென்ற மாரிச்சாமி ரேணுகா தேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு அங்கிருந்த மண்வெட்டி கைப்பிடியால் ரேணுகாவை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ரேணுகா உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×