search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சுற்றுச்சூழல் தினம்: பிளாஸ்டிக் பை கலாசாரத்தை ஒழிக்க உறுதி ஏற்போம் - அன்புமணி ராமதாஸ்
    X

    உலக சுற்றுச்சூழல் தினம்: பிளாஸ்டிக் பை கலாசாரத்தை ஒழிக்க உறுதி ஏற்போம் - அன்புமணி ராமதாஸ்

    கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை கைவிட்டு துணிப்பைகளுக்கு மாற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். #WorldEnvironmentDay #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972-ம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில் ஜூன் 5-ந் தேதி கூட்டப்பட்டது. இதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் நாளாக உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐ.நா. சபை முன் வைத்துள்ளது. ஐ.நா. சார்பில் 2018 உலக சுற்றுச்சூழல் நாளை கடைபிடிக்கும் முதன்மை நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்திலிருந்து நாட்டின் எல்லா நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மைக்கான பிரசார இயக்கத்தை தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால், ஓராண்டு காலம் கடந்த பின்னரும் இன்னமும் கூட சட்டவிதிகள் வெற்று காகிதமாகவே உள்ளன. இதேபோன்று இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தில் தொடங்கும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரமும் வாய்ப்பேச்சாக முடிந்துவிடக்கூடாது. தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளையும், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளையும் முழுமையாக செயல்படுத்தவேண்டும்.



    கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பழக்கத்தை கைவிட்டு துணிப்பைகளுக்கு மாற வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு துணிப்பையை கொண்டு செல்வதன் மூலம் பிளாஸ்டிக் பை கலாசாரத்தை ஒழிக்க உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #WorldEnvironmentDay #AnbumaniRamadoss
    Next Story
    ×