search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் இன்ஸ்பெக்டர் மகன் கல்லால் தாக்கி கொலை
    X

    மதுரையில் இன்ஸ்பெக்டர் மகன் கல்லால் தாக்கி கொலை

    ஓய்வு பெற்ற இன்ஸ் பெக்டர் மகன் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரை நண்பரே கல்லால் தாக்கி கொலை செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மதுரை:

    மதுரை அய்யர் பங்களா முரளி தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் சிபிராஜ் (வயது 23). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார்.

    தனது நண்பரின் உறவினர் திருமணத்துக்காக சிபிராஜ் ஊருக்கு வந்தார். நேற்று திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக அவர் வீட்டில் கூறிச்சென்றார்.

    இந்த நிலையில் கூடல்புதூர் அருகே உள்ள பொட்டகுளம் வேத வல்லிநகர் முனியாண்டி கோவில் அருகே சிபிராஜ் பிணமாக கிடப்பதாக ஜெயசீலனுக்கு தகவல் கிடைத்தது. கூடல்புதூர் போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது தலை நசுங்கிய நிலையில் சிபிராஜ் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். சிபிராஜுடன் சென்றது யார்? என்பது குறித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. சிபிராஜை அவரது நண்பர் பாலாஜி என்பவர்தான் கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் பாலாஜியை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், சிபி ராஜும், நானும் ஒரே பெண்ணை காதலித்தோம். அந்த பெண் என்னை விரும்பினார். இது சிபி ராஜுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் அந்த பெண்ணை பற்றி பேஸ் புக்கில் தவறான கருத்துக்களை பரப்பினார். இது தெரியவந்ததும், அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அதன்படி சிபிராஜிடம் நைசாக பேசி அவரை வேதவல்லி நகருக்கு வரவழைத்து, அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×