என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாதவரத்தில் வாகனம் மோதி புள்ளிமான் பலி
Byமாலை மலர்4 Jun 2018 10:08 AM GMT (Updated: 4 Jun 2018 10:08 AM GMT)
மாதவரம் ரவுண்டானா பகுதியில் இன்று காலை வாகனம் மோதியதில் புள்ளி மான் பலியானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாதவரம்:
மாதவரம் ரவுண்டானா பகுதியில் இன்று அதிகாலை புள்ளிமான் ஒன்று தாவிக்குதித்து ஓடியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மானை பிடிக்க முயன்றனர். ஆனால் அது தப்பி ஓடி விட்டது.
இந்த நிலையில் காலை 7 மணியளவில் அப்பகுதியில் சாலை ஓரத்தில் பலத்த காயங்களுடன் அந்த புள்ளி மான் உயிருக்கு போராடிய படி கிடந்தது. அதனை பொதுமக்கள் மீட்டு மாதவரம் போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது புள்ளிமான் இறந்துவிட்டது.
சாலையை கடந்து ஓடியபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் பலத்த காயம் அடைந்து இறந்து உள்ளது.
மாதவரம் பகுதியில் புள்ளிமான் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. எனவே விலங்குகளை கடத்தும் கும்பல் இந்த புள்ளி மானை ஆந்திரா வனப்பகுதி அல்லது பூண்டி வனப்பகுதியில் இருந்து வாகனத்தில் கடத்தி வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
வாகனத்தில் இருந்து புள்ளிமான் தாவிக்குதித்து தப்பி ஓடியபோது விபத்தில் சிக்கி இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
பலியான மானின் உடலை வேளச்சேரி வனத்துறையினர் கைப்பற்றினர். மானை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டும் இதேபோல் 2 புள்ளி மான்கள் வாகனம் மோதி இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
மாதவரம் ரவுண்டானா பகுதியில் இன்று அதிகாலை புள்ளிமான் ஒன்று தாவிக்குதித்து ஓடியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மானை பிடிக்க முயன்றனர். ஆனால் அது தப்பி ஓடி விட்டது.
இந்த நிலையில் காலை 7 மணியளவில் அப்பகுதியில் சாலை ஓரத்தில் பலத்த காயங்களுடன் அந்த புள்ளி மான் உயிருக்கு போராடிய படி கிடந்தது. அதனை பொதுமக்கள் மீட்டு மாதவரம் போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது புள்ளிமான் இறந்துவிட்டது.
சாலையை கடந்து ஓடியபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் பலத்த காயம் அடைந்து இறந்து உள்ளது.
மாதவரம் பகுதியில் புள்ளிமான் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. எனவே விலங்குகளை கடத்தும் கும்பல் இந்த புள்ளி மானை ஆந்திரா வனப்பகுதி அல்லது பூண்டி வனப்பகுதியில் இருந்து வாகனத்தில் கடத்தி வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
வாகனத்தில் இருந்து புள்ளிமான் தாவிக்குதித்து தப்பி ஓடியபோது விபத்தில் சிக்கி இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
பலியான மானின் உடலை வேளச்சேரி வனத்துறையினர் கைப்பற்றினர். மானை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டும் இதேபோல் 2 புள்ளி மான்கள் வாகனம் மோதி இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X