search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன்னியம்பட்டி அருகே புது மாப்பிள்ளை விபத்தில் பலி
    X

    வன்னியம்பட்டி அருகே புது மாப்பிள்ளை விபத்தில் பலி

    வன்னியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 27). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் இனிப்பகத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடித்து, வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வன்னியம்பட்டி விலக்கு அருகே சென்றபோது நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள், அங்கிருந்த பாலத்தில் மோதியது.

    இந்த விபத்தில் சேகர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வன்னியம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாணை நடத்தினர்.

    பலியான சேகருக்கு வருகிற (7-ந் தேதி) திருமணம் நடக்க இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×