search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
    X

    மணல் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

    மின்சாரம் இல்லாததால் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிய தொழிலாளி மீது மணல் லாரி மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி பலியானார்.
    போரூர்:

    வளசரவாக்கம், எஸ்.வி.எஸ்.நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் சண்முகம் (வயது 57). லாரியில் மணல் இறக்கும் வேலை செய்து வந்தார். சண்முகம் நேற்று இரவு வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டிப்பர் லாரி மணல் இறக்குவதற்காக பின்னால் வந்த போது எதிர்பாராத விதமாக அங்கு தூங்கி கொண்டிருந்த சண்முகம் மீது ஏறி இறங்கியது. 

    இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய லாரி டிரைவர் சேட்டுவை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×