search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - தமிழக டிஜிபி உத்தரவு
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - தமிழக டிஜிபி உத்தரவு

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். #ThoothukudiFiring #ThoothukudiIncident #CBCID
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே, பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது.



    அதேசமயம் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மற்றும் அதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.  #ThoothukudiFiring #ThoothukudiIncident #CBCID
    Next Story
    ×