search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே பெண்ணிடம் 11 பவுன் நகை அபேஸ்: மர்ம நபருக்கு வலைவீச்சு
    X

    மதுரை அருகே பெண்ணிடம் 11 பவுன் நகை அபேஸ்: மர்ம நபருக்கு வலைவீச்சு

    மதுரை அருகே சாமி கும்பிட்ட போது பெண்ணிடம் 11 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்தனம்பட்டியைச் சேர்ந்தவர் காசம்மாள் (வயது 65). இவர் தனது மகன் மற்றும் மருமகன், குடும்பத்துடன் மதுரை அருகே விளாச்சேரியில் உள்ள ஆதி சிவன் கோவிலில் நேற்று சாமி கும்பிட்டார்.

    கோவில் கருவறை அருகே நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்த போது திடீரென காசம்மாள் அணிந்திருந்த 11 பவுன் நகையை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டு தப்பி விட்டனர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

    இது குறித்து காசம்மாள் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×