என் மலர்
செய்திகள்

வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி அக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி:
தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை பண்ருட்டி சேலம் மெயின் ரோட்டில் அங்கு செட்டிப்பாளையம் மெயின் ரோட்டில் பண்ருட்டி வடக்குஒன்றிய செயலாளர் கொக்கு பாளையம் பாலமுருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பண்ருட்டி சேலம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story