என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவோணம் அருகே வாலிபரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்குதல்
திருவோணம்:
தஞ்சை, கரம்பக்குடி அருகே உள்ள தென்நகரைச் சேர்ந்தவர் முத்து (வயது 37). டெய்லர். இவரது மனைவி விஜயலட்சுமி.
முத்து நேற்று கரம்பக்குடியில் இருந்து ஊரணிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவோணம் அருகே பணிகொண்டான் விடுதி பிரிவு சாலையில் சென்றபோது கையில் முறுக்கு கம்பியுடன் வாலிபர் ஒருவர் முத்துவை வழிமறித்தார். இதை பார்த்து முத்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அப்போது அந்த நபர் கையில் வைத்திருந்த கம்பியால் முத்துவின் தலை மற்றும் உடலில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் தலையில் பலத்த காயத்துடன் முத்து கீழே சாய்ந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருவோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார் முத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவை தாக்கிய நபர் யார்? எதற்காக தாக்கினார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்