என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி- கிணற்றில் குதித்து மாணவன் தற்கொலை
Byமாலை மலர்24 May 2018 10:25 AM GMT (Updated: 24 May 2018 10:25 AM GMT)
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் விஷால் (வயது 15). ஆலங்காயம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தான்.
இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மாணவன் விஷால் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தான். இதனால் மனமுடைந்த விஷால் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்காயம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் விஷால் (வயது 15). ஆலங்காயம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தான்.
இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மாணவன் விஷால் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தான். இதனால் மனமுடைந்த விஷால் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்காயம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X