search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் - பாலகிருஷ்ணன்
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் - பாலகிருஷ்ணன்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். #SterliteProtest #BanSterlite

    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல்லில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 100 நாட்களாக அந்த மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.

    மேலும் அவர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் முயற்சியிலேயே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

    கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி பின்னர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

    தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ள நிலையில் அதைப்பற்றி கவலைப்படாத அரசு நச்சுக்காற்றினால் மனித உயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஏன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    மக்களுக்காக ஆட்சி செய்வதை விட்டு விட்டு முதலாளிகளுக்காக அவர்கள் ஆட்சி செய்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும்.

    10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #SterliteProtest #BanSterlite

    Next Story
    ×