search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிபோதையில் ரகளை செய்த டிரைவர்
    X

    பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிபோதையில் ரகளை செய்த டிரைவர்

    பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிபோதையில் ரகளை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள திருமலைநாயக்கன் பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்த கடைக்கு ஜோதிபுரம் வீரபாண்டி பிரிவு லட்சுமி கோவில் வீதியை சேர்ந்த அருண் (வயது 21) என்பவர் மது குடிக்க சென்றுள்ளார். இவர் மினிடோர் டிரைவராக உள்ளார்.

    போதை அதிகமானதால் டாஸ்மாக் கடையில் மற்றவர்களுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பினர். ஆனால் இடையில் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். அதற்குள் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ஆனால் ஸ்டேசனுக்கு வரமாட்டேன், நான் என்ன கொலை செய்து விட்டேனா, என்று அவர் ரகளையில் ஈடுபட்டதால் கையை கட்டி மீண்டும் ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அருண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×