search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ராமநாதபுரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    மூடிய மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்று பணியிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம்:

    மூடிய மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்று பணியிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் சி.ஐ.டி.யு. சங்க மாவட்டத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். 

    மாவட்ட துணைத் தலைவர் ராமபாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் தனுஷ்கோடி வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, மின்வாரிய சி.ஐ.டி.யு., சங்க மாநிலத் தலைவர் குருவேல், மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் பேசினர். 

    மாவட்ட பொருளாளர் நம்புராஜன், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயபாலன், பூமிநாதன், சரவணன், முனியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×