search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்
    X

    தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்

    தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    1. எம்.ஸ்ரீஅபினவ்-தக்கலை உதவி சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2. என்.எஸ்.நிஷா-சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

    3. இ.சாய்சரண் தேஜஸ்வி- குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்கிறார்.

    4. ரவளி பிரியா கந்தபுனேரி- திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

    5. எஸ்.செல்வநாகரத்தினம்- தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    6. கே.பிரபாகர்- ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

    7. எஸ்.எஸ்.மகேஸ்வரன்- திண்டுக்கல் அமலாக்கப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராஜபாளையம் சிறப்புக் காவல்படை 11-வது பட்டாலியன் கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    8. வி.ஷியாமளாதேவி- பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணை கூடுதல் கமிஷனராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    9. சி.ஷியாமளாதேவி- சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனரான இவர், மத்திய சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

    10. பர்வேஸ்குமார்- சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக பணியாற்றும் இவர், சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

    11. எஸ்.சாந்தி- மத்திய சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டான இவர், தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    12. பி.சாமுண்டீஸ்வரி- தமிழ்நாடு போலீஸ் அகாடமி சூப்பிரண்டான இவர், சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    13. ஜி.ஷாசங்க் சாய்- சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனரான இவர், அடையாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    14. ரோகித் நாதன் ராஜகோபால்- சென்னை அடையாறு துணை கமிஷனரான இவர், சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

    15. ஜார்ஜி ஜார்ஜ்- சென்னை ரெயில்வே சூப்பிரண்டான இவர், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    16. பி.ராஜன்- சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

    17. ஜி.ஸ்டாலின்- சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டான இவர், சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

    18. ஜி.சம்பத்குமார்- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை ஆவடி வீராபுரம் சிறப்பு காவல்படை 3-வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    19. பி.கண்ணம்மாள்- சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய சரக சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

    20. எச்.ஜெயலட்சுமி- லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய சரக சூப்பிரண்டான இவர், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    21. சரோஜ்குமார் தாக்கூர்- லஞ்ச ஒழிப்புத்துறை தெற்கு சரக சூப்பிரண்டான இவர், திருச்சி ரெயில்வே சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

    22. ஆன்னிவிஜயா- திருச்சி ரெயில்வே சூப்பிரண்டான இவர், சென்னை போதை ஒழிப்பு புலனாய்வுப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

    23. என்.தேவராணி- சென்னை போதை ஒழிப்பு புலனாய்வுப்பிரிவு சூப்பிரண்டான இவர், சென்னை மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பதவி ஏற்பார்.

    24. இ.எஸ்.உமா- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், திருப்பூர் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

    25. ஏ.கயல்விழி- திருப்பூர் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

    26. எஸ்.சக்திகணேசன்- திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக உள்ள இவர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    27. டாக்டர் ஆர்.சிவகுமார்- ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

    28. ஐ.ஈஸ்வரன்- சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக உள்ள இவர், அம்பத்தூர் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

    29. எஸ்.சர்வேஷ் ராஜ்- சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    30. ஆர்.அந்தோணி ஜான்சன் ஜெயபால்- சென்னை ஆவடி வீராபுரம் சிறப்பு காவல்படை 3-வது பட்டாலியன் கமாண்டராக பணிபுரியும் இவர், சென்னை 2-வது பட்டாலியன் சிறப்பு காவல்படை கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×