search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    ஈரோட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    ஈரோட்டில் அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதி, மஜீத் வீதி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.

    இதையொட்டி மாநகராட்சி கமி‌ஷனர் சீனிஅஜ்மல்கான் உத்தரவுப்படி அங்கு நகர் நல அலுவலர் சுமதி, துப்புரவு ஆய்வாளர்கள் நாச்சிமுத்து, நல்லசாமி ஆகியோர் சோதனை நடத்தினர்.

    அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இது குறித்து நகர் நல அலுவலர் சுமதி கூறும்போது, ‘‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதையும் மீறி சிலர் விற்று வருகிறார்கள். இனி தொடர்ந்து அப்படி விற்று வந்தால் கடை உரிமத்தை ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை’’ என்று கூறினார்.

    முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் ஒரு வேனில் ஏற்றி கொண்டு சென்ற போது அந்த பகுதி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேனையும் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப் பான சூழ்நிலை நிலவியது.

    Next Story
    ×