என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணியம்பாடி அருகே கார் மோதி விவசாயி பலி
Byமாலை மலர்15 May 2018 11:57 AM GMT (Updated: 15 May 2018 11:57 AM GMT)
கணியம்பாடி அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த சதுப்பேரியை சேர்ந்தவர் சதானந்தம் (வயது 56). விவசாயி.
சதானந்தம் சம்பவத்தன்று தனது உறவினர் சிங்காரவேலு (58). என்பவருடன் கணியம்பாடியிலிருந்து வேலூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். பைக்கை சிங்காரவேலு ஓட்டினார்.
கணியம்பாடி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பைக்கிற்கு பெட்ரோல் போடுவற்காக சிங்காரவேலு, சதானந்தத்தை பைக்கில் இருந்து சாலையின் ஓரம் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
அப்போது கண்ணமங்கலத்திலிருந்து வேலூர் நோக்கி வந்த கார் சாலையின் அருகே நின்று கொண்டிருந்த சதானந்தத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சதானந்தம் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதானந்தம் இறந்தார்.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X