search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயிலில் 21-வது நாளாக முருகன் மவுன விரதம்
    X

    வேலூர் ஜெயிலில் 21-வது நாளாக முருகன் மவுன விரதம்

    வேலூர் ஜெயிலில் 21-வது நாளாக முருகன் தொடர்ந்து மவுன விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை கைதி முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இருவரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஜெயில் வாழ்க்கையில் ஆன்மீக பாதைக்கு திரும்பிய முருகன் நீளமான தலைமுடி, தாடியுடன் இருக்கிறார்.

    கடந்த 23-ந்தேதி முதல் முருகன் சிறையில் மவுன விரதம் இருந்து வருகிறார்.

    தொடர்ந்து 21-வது நாளாக இன்றும் மவுன விரதம் இருந்து வருகிறார். கடந்த 5-ந் தேதி நடந்த நளினி முருகன் சந்திப்பின் போது கூட முருகன் காகிதத்தில் எழுதி நளினியிடம் காண்பித்தார்.

    ஜெயிலிலும் தனது தேவைகளை ஜெயில் அலுவலரிடம் காகிதத்தில் எழுதி காண்பித்து வருகிறார். மன அமைதி வேண்டி முருகன் 48 நாட்கள் மவுன விரதம் இருக்க போவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×