என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்ப தகராறில் மருமகனை தாக்கிய மாமனார்: 3 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    குடும்ப தகராறில் மருமகனை தாக்கிய மாமனார்: 3 பேர் மீது வழக்குப்பதிவு

    நன்னிலம் அருகே குடும்ப தகராறில் மருமகனை தாக்கிய மாமனார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை அடுத்த நாகக்குடியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது24). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி உமாரஞ்சனி.

    கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் உமாரஞ்சனி கணவரை பிரிந்து அடவக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரது தந்தை நடராஜன் மகளை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வீடு பூட்டி இருந்ததால் சங்கர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வீட்டின் சாவியை கேட்டனர்.

    அப்போது சங்கர் சாவியை கொடுக்க மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜன், அவரது உறவினர்கள் பக்கிரிசாமி, மருதுபாண்டி ஆகியோர் சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த சங்கர் நன்னிலம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குபதிவு செய்து சங்கரை தாக்கிய 3 பேரையும் தேடி வருகிறார்.

    Next Story
    ×