search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலங்காநல்லூர் அருகே 5½ கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
    X

    அலங்காநல்லூர் அருகே 5½ கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது

    அலங்காநல்லூர் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 5½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 வாலிபர்களை கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி தனியார் வாகன விற்பனை மையத்தில் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 5½ கிலோ கஞ்சா, ரூ.400 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை பூந்தமல்லி நகரை சேர்ந்த கர்ணன் (வயது 55), தத்தனேரி பாக்கியநாதபுரத்தை சேர்ந்த இன்பராஜா (35), அலங்காநல்லூர் பெரிய ஊர்சேரியை சேர்ந்த மகாலிங்கம் (45) ஆகிய 3 பேரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×