search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூரில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கூலி தொழிலாளி தற்கொலை
    X

    பாகூரில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கூலி தொழிலாளி தற்கொலை

    பாகூர் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பாகூர்:

    பாகூர் சோரியாங்குப்பம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி (46) என்ற மனைவியும், 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

    மகாலிங்கம் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

    இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று குடித்து விட்டு வந்ததால் மனைவி திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த அவர் அதே பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தூங்கி உள்ளார்.

    இதை அறிந்த லட்சுமி அங்கு சென்று வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்து விட்டு வந்தால் பிள்ளைகளை எப்படி கரை சேர்ப்பது? என்று கூறி விட்டு வீட்டுக்கு சாப்பிட வாருங்கள் என கூறி சென்று விட்டார்.

    இந்த நிலையில் தென் பெண்ணையாற்றின் அருகே கைலியால் ஒருவர் மரத்தில் தூக்கு போட்டு தொங்குவதை அந்த பகுதியில் சென்றவர்கள் சிலர் பார்த்து அப்பகுதி மக்களிடம் கூறினர்.

    அங்கு சென்று பார்த்த போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது மகாலிங்கம் என்பது தெரிய வந்தது.

    உடனே அவரது மனைவி லட்சுமிக்கு தகவல் கொடுத்தனர். லட்சுமியும், அவரது பிள்ளைகளும் அலறியடித்து ஓடி வந்தனர். தூக்கில் தொங்கிய மகாலிங்கத்தை கண்டு கதறி அழுதனர்.

    இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×