என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெரினா கடலில் மூழ்கி ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்5 May 2018 7:28 PM GMT (Updated: 5 May 2018 7:28 PM GMT)
மெரினாவில் திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
சென்னை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). ரேஷன் கடை ஊழியர். சென்னையில் நேற்று முன்தினம் மாலை நடந்த ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ராஜசேகர் பங்கேற்றார். ஆர்ப்பாட்டம் முடிந்து ஊர் திரும்பும் முன்பு மெரினா கடற்கரையை பார்க்க ஆசைப்பட்டு ராஜசேகர் மெரினாவுக்கு சென்றார். அங்கு கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தார்.
அப்போது திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி ராஜசேகர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து அங்கிருந்தோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் ராஜசேகரை தேடினர். இந்தநிலையில் உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் ராஜசேகர் உடல் கரை ஒதுங்கியது.
இதேபோல மெரினா கடலில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த மெப்சுனார் (17) என்பவர், ராட்சத அலையில் சிக்கி கடலில் மாயமானார். சிறிது நேரத்தில் அவரது உடலும் கரை ஒதுங்கியது. நேபாளத்தை சேர்ந்த மெப்சுனார், பெரம்பூரில் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்ததும், நண்பர்களுடன் மெரினாவுக்கு வந்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). ரேஷன் கடை ஊழியர். சென்னையில் நேற்று முன்தினம் மாலை நடந்த ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ராஜசேகர் பங்கேற்றார். ஆர்ப்பாட்டம் முடிந்து ஊர் திரும்பும் முன்பு மெரினா கடற்கரையை பார்க்க ஆசைப்பட்டு ராஜசேகர் மெரினாவுக்கு சென்றார். அங்கு கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தார்.
அப்போது திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி ராஜசேகர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து அங்கிருந்தோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் ராஜசேகரை தேடினர். இந்தநிலையில் உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் ராஜசேகர் உடல் கரை ஒதுங்கியது.
இதேபோல மெரினா கடலில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த மெப்சுனார் (17) என்பவர், ராட்சத அலையில் சிக்கி கடலில் மாயமானார். சிறிது நேரத்தில் அவரது உடலும் கரை ஒதுங்கியது. நேபாளத்தை சேர்ந்த மெப்சுனார், பெரம்பூரில் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்ததும், நண்பர்களுடன் மெரினாவுக்கு வந்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X