என் மலர்
செய்திகள்

சுவாமிமலை அருகே தூக்குபோட்டு விவசாயி தற்கொலை
சுவாமிமலை அருகே தூக்குபோட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவில், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). விவசாயி.
இந்நிலையில் கடந்த சில மாதமாக சண்முகம் வயிற்று வலியால் அவதிபட்டு வந்துள்ளார். பல மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாக வில்லையாம். இதனால் விரக்தி அடைந்த சண்முகம் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி செல்வி கணவர் சாவில் மர்மம் இருப்பதாக சுவாமிமலை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story