என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
    X

    பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

    பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் கருப்பு கொடி கட்டப்பட்டது

    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அடுத்த செம்பேறி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அனுமதியின்றி 2 லாரிகளில் அதன் டிரைவர்கள் மணல் அள்ளினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர். தகவல் அறிந்த வெள்ளாறு பாதுகாப்பு சங்கத்தினர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து அந்த லாரிகளை விரட்டி சென்றனர்.

    பெண்ணாடம் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது 2 லாரிகளையும் மடக்கி பிடித்தனர். இது குறித்து அவர்கள் திட்டக்குடி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாசில்தார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து பெண்ணாடம் போலீசார் லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×