என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளச்சேரி கடையின் பூட்டை உடைத்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் கொள்ளை
    X

    வேளச்சேரி கடையின் பூட்டை உடைத்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் கொள்ளை

    வேளச்சேரி அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் கொள்ளைடியத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேளச்சேரி:

    வேளச்சேரி மெயின் ரோட்டில் புற்றுக்கோவில் பகுதியில் வர்த்தக வளாகம் உள்ளது. இங்கு 4 கடைகள் உள்ளன. கீழ்தளத்தில் ரமேஷ் என்பவர் கைகடிகாரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த விலை உயர்ந்த கைகடிகாரங்கள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    அதன் மதிப்பு ரூ.40 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தக வளாகத்தில் உள்ள கடைகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதன் மூலம் துப்புதுலக்காமல் தடுக்க அவற்றை கொள்ளையர்கள் அகற்றி விட்டனர்.

    இது குறித்து வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×