என் மலர்
செய்திகள்

மதுராந்தகத்தில் லாரி டிரைவரை தாக்கி வழிப்பறி- 2 பேர் கைது
மதுராந்தக்:
கடலூரில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிய லாரி கடந்த 26-ந் தேதி வந்தது. டிரைவர் செந்தில் கவாஸ்கர் லாரியை ஓட்டினார்.
மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இரவு வந்தபோது 8 பேர் கும்பல் லாரியை வழிமறித்தனர். அவர்கள் டிரைவர் செந்தில் கவாஸ்கரை தாக்கி ரூ. 5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட செங்கல்பட்டை அடுத்த திம்மாவரத்தை சேர்ந்த பிரேம்குமார் என்கிற கருப்பன், உத்திரமேரூர் காவ் தண்டலம் கிராமத்தை சேர்ந்த தமிழ்வேந்தன் என்கிற மொச்சை ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கத்தி, இரும்பு கம்பி உள்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வழிப்பறியில் தொடர்புடைய 6 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.






