என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி அருகே டீ கடை உரிமையாளர் தற்கொலை
    X

    பொள்ளாச்சி அருகே டீ கடை உரிமையாளர் தற்கொலை

    பொள்ளாச்சி அருகே டீ கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பெரியார் நகரை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 39). இவர் அந்த பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வந்தார்.

    முனீஸ்வரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் தொழில் தேவைக்காக கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.இந்த நிலையில் முனீஸ்வரனின் டீக்கடை முன்பு அடையாம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது.இதில் கடை சேதமடைந்தது. ஏற்கனவே கடன் சுமை , தற்போது கடையும் சேதமடைந்ததால் முனீஸ்வரன் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட முனீஸ்வரனின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×