என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம் எதிரொலி - எச்.ராஜாவுக்கு கூடுதல் பாதுகாப்பு
    X

    போராட்டம் எதிரொலி - எச்.ராஜாவுக்கு கூடுதல் பாதுகாப்பு

    எச். ராஜா உருவப்படம் எரிப்பு, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் தீவிரமடைந்ததால், காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பெரியார் சிலை குறித்து பதிவிட்ட கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி திராவிட கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

    எச். ராஜா உருவப்படம் எரிப்பு, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் தீவிரமடைந்ததால், காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே எச்.ராஜா தனது கருத்தை மறுத்ததோடு, வருத்தமும் தெரிவித்தார். இருப்பினும் அவருக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை.

    இதனைத் தொடர்ந்து எச்.ராஜாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து திரும்பிய அவருக்கு, காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 10 பேர் இதில் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை ஒட்டன்சத்திரம் சென்ற எச்.ராஜாவோடு, அவர்களும் பாதுகாப்பு பணிக்காக சென்றனர்.

    காரைக்குடி சுப்பிரமணிய புரத்தில் உள்ள எச்.ராஜா வீட்டிலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. #tamilnews


    Next Story
    ×