என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்தது: 12 பேர் காயத்துடன் தப்பினர்
    X

    கோபி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்தது: 12 பேர் காயத்துடன் தப்பினர்

    கோபி அருகே இன்றுகாலை சுற்றுலா வேன் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
    கோபி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கருப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மைசூரில் குருமிளகு பறிக்கப் புறப்பட்டனர். அவர்கள் சுமார் 20 பேர் சுற்றுலா வேன் பிடித்து சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை சக்திவேல் (28) ஓட்டிச் சென்றார்.

    அந்த வேன் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் வேன் டிரைவர் சக்திவேல், வேனில் இருந்த தொழிலாளர்கள் கணேசன் (24), சீத்தா(25), பார்வதி (37), ராமையாள் (40), கனகா (26), சடையன் (30), பாப்பாயி (40), சடச்சி (45), நதியா (28) உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.

    விபத்து ஏற்பட்டதும் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்த காயம் அடைந்தவர்களை மீட்டனர். காயம் அடைந்த 12 பேரும் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×