என் மலர்
செய்திகள்

ஆதம்பாக்கத்தில் 2 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
ஆதம்பாக்கம் பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், வைகைத் தெருவில் டீக்கடை மற்றும் குளிர்பானக்கடை நடத்தி வருபவர் அலிக்குட்டி. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றார்.
இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணம் பெட்டியில் இருந்து ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதே போல் அருகில் இருந்த அம்பலவாணன் என்பவருக்கு சொந்தமான செல்போன் ரீசார்ஜ் கடைக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த ரூ.11 ஆயிரத்தை சுருட்டி சென்று இருந்தனர்.
மேலும் அதே ராமகிருஷ்ணபுரம் 3-வது தெருவில் நிறுத்தப்பட்டு இருந்த 4 ஆட்டோக்களில் பேட்டரிகள் திருடு போய் இருந்தது.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அலிக்குட்டி கடைக்குள் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 7 புதிய துணி பண்டல்கள் கிடந்தன.
கொள்ளை கும்பல் அதனை வேறு கடையில் திருடி வந்திருப்பதும், இங்கு பணம் கிடைத்ததும் துணி பண்டல்களை விட்டு சென்று இருப்பதும் தெரிந்தது.
கடந்த மாதம் ஆதம்பாக்கம் பரமேஸ்வரன் நகர் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் 4 கடைகளில் கொள்ளை நடந்தது. இந்த வழக்குகளில் இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவத்தால் ஆதம்பாக்கம் பகுதி வியாபாரிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
ஆதம்பாக்கம், வைகைத் தெருவில் டீக்கடை மற்றும் குளிர்பானக்கடை நடத்தி வருபவர் அலிக்குட்டி. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றார்.
இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணம் பெட்டியில் இருந்து ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதே போல் அருகில் இருந்த அம்பலவாணன் என்பவருக்கு சொந்தமான செல்போன் ரீசார்ஜ் கடைக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த ரூ.11 ஆயிரத்தை சுருட்டி சென்று இருந்தனர்.
மேலும் அதே ராமகிருஷ்ணபுரம் 3-வது தெருவில் நிறுத்தப்பட்டு இருந்த 4 ஆட்டோக்களில் பேட்டரிகள் திருடு போய் இருந்தது.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அலிக்குட்டி கடைக்குள் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 7 புதிய துணி பண்டல்கள் கிடந்தன.
கொள்ளை கும்பல் அதனை வேறு கடையில் திருடி வந்திருப்பதும், இங்கு பணம் கிடைத்ததும் துணி பண்டல்களை விட்டு சென்று இருப்பதும் தெரிந்தது.
கடந்த மாதம் ஆதம்பாக்கம் பரமேஸ்வரன் நகர் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் 4 கடைகளில் கொள்ளை நடந்தது. இந்த வழக்குகளில் இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவத்தால் ஆதம்பாக்கம் பகுதி வியாபாரிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
Next Story






