என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து வேதாரண்யம், கரியாப்பட்டினம் பகுதியில் சாலை மறியல்
    X

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து வேதாரண்யம், கரியாப்பட்டினம் பகுதியில் சாலை மறியல்

    வேதாரண்யம், கரியாப்பட்டினம் பகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம், கரியாப்பட்டினம் பகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    வேதாரண்யத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ் தலைமையில் தி.மு.க. நகர செயலாளர் புகழேந்தி, காங்கிரஸ் சார்பில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கரவடிவேல், நாகை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போஸ், மகிளா காங்கிரஸ் செல்வராணி, இந்திய கம்யூனிஸ்டு மாரியப்பன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் கரியாப்பட்டினம் கடைத்தெருவில் தி.மு.க கிழக்கு ஒன்றியச் செயலாளர் கவிஞர் மாசி தலைமையில் மறியல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×