என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளைச்சல் அதிகரிப்பால் ஈரோடு மார்க்கெட்டுக்கு பழங்கள் வரத்து அதிகரிப்பு
    X

    விளைச்சல் அதிகரிப்பால் ஈரோடு மார்க்கெட்டுக்கு பழங்கள் வரத்து அதிகரிப்பு

    பழவகைகளின் விளைச்சல் அதிகரித்து, வரத்தும் சீரானதால் ஆப்பிள், திராட்சை போன்ற பழங்கள் போன்றவை மார்க்கெட்டில் அதிகளவில் குவிந்துள்ளது.
    ஈரோடு:

    கடந்த சில மாதங்களாக ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, பைன்ஆப்பிள் போன்ற பழங்களின் விளைச்சல் குறைவானதால் அவற்றின் வரத்து குறைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவகைகளின் விளைச்சல் அதிகரித்து, வரத்தும் சீரானதால் ஆப்பிள், திராட்சை போன்ற பழங்கள் போன்றவை மார்க்கெட்டில் அதிகளவில் குவிந்துள்ளது.

    இது குறித்து நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது.-

    வழக்கமாக ஐப்பசி மாதம் முதல் தை மாதம் வரை மழை, பனி போன்ற காரணத்தால் பழங்கள் வரத்து அதிகரிக்கும். நடப்பாண்டிலும் இதே நிலை தொடர்வதால் சாத்துக்குடி, ஆப்பிள், போன்ற பழ வகைகள் வரத்து அதிகரித்துள்ளது.

    ஈரோடு தினசரி மார்க்கெட்டில் டில்லி மற்றும் சிம்லா ஆப்பிள் கிலோ ரூ.120-க்கும், சாத்துக்குடி ரூ.50 முதல் ரூ.65 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    விதை இல்லாத திராட்சை ரூ.80-க்கும், பன்னீர் திராட்சை ரூ.50-க்கும், கருப்பு திராட்சை ரூ.50-க்கும் கமல ஆரஞ்சு ரூ.60-க்கும், பைன் ஆப்பிள் ரூ.30 முதல் 40 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.70-க்கு விற்ற கொய்யா பழம் தற்போது ரூ,50-க்கு விற்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரை இதே நிலை தான் நீடிக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×