என் மலர்
செய்திகள்

காட்டுமன்னார் கோவில் அருகே டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயர் பலி
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் இரட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 21). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் நேற்று இரவு தனது உறவினர் பெண் பவித்ரா(21) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில் நோக்கி புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிளை வெங்கடேசன் ஓட்டி வந்தார். இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருச்சனாபுரம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக வெங்கடேசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பவித்ரா படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.விபத்து குறித்து புத்தூர் போலீசில் புகார் செய்யபட்டது.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.