என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்குடி அருகே நள்ளிரவில் வீடு தீப்பிடித்து ரூ.1 லட்சம் சேதம்
Byமாலை மலர்27 Dec 2017 1:41 PM GMT (Updated: 27 Dec 2017 1:41 PM GMT)
மன்னார்குடி அருகே நள்ளிரவில் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
மன்னார்குடி:
மன்னார்குடி பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா. இவர்களது மகன் அருள் (வயது 16).
இந்த நிலையில் நேற்று இரவு புஷ்பா உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் வீட்டில் அருள் மட்டும் இருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வீட்டில் தீப்பிடித்தது. அப்போது தூங்கி கொண்டிருந்த அருள், திடீரென கண்விழித்து பார்த்த போது வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.
இதுபற்றி மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை, இதுகுறித்து மன்னார்குடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மன்னார்குடி பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா. இவர்களது மகன் அருள் (வயது 16).
இந்த நிலையில் நேற்று இரவு புஷ்பா உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் வீட்டில் அருள் மட்டும் இருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வீட்டில் தீப்பிடித்தது. அப்போது தூங்கி கொண்டிருந்த அருள், திடீரென கண்விழித்து பார்த்த போது வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.
இதுபற்றி மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை, இதுகுறித்து மன்னார்குடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X