என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்திலி அருகே 3 வீடுகளில் கொள்ளை
    X

    கந்திலி அருகே 3 வீடுகளில் கொள்ளை

    கந்திலி அருகே 3 வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம கும்பல் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    கந்திலி அருகே உள்ள பெரிய கண்ணாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (50). அரசு பஸ் கண்டக்டர் நேற்று வீட்டை பூட்டி விட்டு எதிரே உள்ள மற்றொரு அறையில் தூங்கினர்.

    மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை அடைத்து ஒரு பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இதே பகுதியில் உள்ள இந்திராணி என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    அதே ஊரை சேர்ந்த பானிபூரி வியாபாரி சகாதேவன் (35) குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அவரது வீட்டில் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். அங்கு எவ்வளவு நகை, பணம் கெள்ளைபோனது என்பது தெரியவில்லை.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கந்திலி போலீசார் கொள்ளை நடந்த வீடுகளில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×