என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறையில் பஸ்சிலிருந்து தவறி விழுந்த வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலி
மயிலாடுதுறையில் பஸ்சில் ஏற முயன்ற போது தவறி விழுந்ததில் வாலிபர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
மயிலாடுதுறை:
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கணபதி நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது36). சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
மயிலாடுதுறை அருகே குடவாசல் பகுதி திருமங்கலத்தில் வசித்து வந்த இவரது சித்தி நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள மகேந்திரன் தனது மனைவி டெல்சியுடன்(30) நேற்று மயிலாடுதுறை வந்தார்.
பின்னர் நேற்று இரவு சென்னை திரும்ப மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு பஸ்சிற்காக காத்திருந்தார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது சென்னை செல்லும் அரசு விரைவு பஸ் ஒன்று பஸ் நிலையத்திற்குள் நுழைந்துள்ளது. இதில் இடம் பிடிப்பதற்காக மகேந்திரன் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பஸ்சில் ஏறமுயன்றபோது தவறி கீழே விழுந்தார்.
இதில் பஸ்சின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் அக்கம்பக்த்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கணபதி நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது36). சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
மயிலாடுதுறை அருகே குடவாசல் பகுதி திருமங்கலத்தில் வசித்து வந்த இவரது சித்தி நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள மகேந்திரன் தனது மனைவி டெல்சியுடன்(30) நேற்று மயிலாடுதுறை வந்தார்.
பின்னர் நேற்று இரவு சென்னை திரும்ப மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு பஸ்சிற்காக காத்திருந்தார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது சென்னை செல்லும் அரசு விரைவு பஸ் ஒன்று பஸ் நிலையத்திற்குள் நுழைந்துள்ளது. இதில் இடம் பிடிப்பதற்காக மகேந்திரன் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பஸ்சில் ஏறமுயன்றபோது தவறி கீழே விழுந்தார்.
இதில் பஸ்சின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் அக்கம்பக்த்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






