என் மலர்
செய்திகள்

அனிதா தற்கொலை வழக்கு விசாரணை: தலைமை செயலாளர் , போலீஸ் டி.ஜி.பி. டெல்லியில் ஆஜராக சம்மன்
மாணவி அனிதா தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தலைமை செயலர், டி.ஜி.பி., அரியலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
திருச்சி:
அரியலூர் மாணவி அனிதா தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசின் தலைமை செயலர், டி.ஜி.பி., அரியலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆதிதிராவிடர் மக்களின் நலன்சார்ந்த திட்டங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராசாமணி, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திருச்சி மாவட்டத்தில் அனைத்துத்துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு சென்று சேர்ந்துள்ளது என்பது குறித்தும், மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆணைய துணைத்தலைவர் முருகன் கேட்டறிந்தார்.
ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவின் மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை போதுமானதாக இல்லை. இது குறித்து மேலும் விவரங்களை கேட்டறிய அரியலூர் மாவட்ட கலெக்டர், அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு, தமிழக டி.ஜி.பி., தமிழக தலைமை செயலாளர் ஆகியோரை அடுத்த மாதம் 12-ந் தேதி டெல்லியில் ஆணையத்தின் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென சம்மன் அனுப்பி உள்ளோம்“ என்று கூறினார்.
அரியலூர் மாணவி அனிதா தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசின் தலைமை செயலர், டி.ஜி.பி., அரியலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆதிதிராவிடர் மக்களின் நலன்சார்ந்த திட்டங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராசாமணி, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திருச்சி மாவட்டத்தில் அனைத்துத்துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு சென்று சேர்ந்துள்ளது என்பது குறித்தும், மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆணைய துணைத்தலைவர் முருகன் கேட்டறிந்தார்.
ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவின் மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை போதுமானதாக இல்லை. இது குறித்து மேலும் விவரங்களை கேட்டறிய அரியலூர் மாவட்ட கலெக்டர், அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு, தமிழக டி.ஜி.பி., தமிழக தலைமை செயலாளர் ஆகியோரை அடுத்த மாதம் 12-ந் தேதி டெல்லியில் ஆணையத்தின் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென சம்மன் அனுப்பி உள்ளோம்“ என்று கூறினார்.
Next Story






