என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோவையில் அமெரிக்க என்ஜினீயர் விபத்தில் பலி
By
மாலை மலர்25 Nov 2017 2:37 PM GMT (Updated: 25 Nov 2017 2:37 PM GMT)

மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் விபத்தில் பலியானார். பெண் பார்க்க வந்த போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
கோவை:
கோவை சின்னியம் பாளையம் அடுத்துள்ள ஆர்.ஜி. புதூரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ரகுபதி (32). அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன் கோவை வந்தார். நாளை அவர் மீண்டும் அமெரிக்கா செல்ல இருந்தார். இதையொட்டி பழனி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
இதை தொடர்ந்து நேற்று இரவு 9.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு புறப்பட்டார். ஹோப் காலேஜ் அருகே சென்றபோது சவுக்குகட்டையால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு நுழைவு வாயிலில் மோதி கீழே விழுந்தார்.
அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த வாகனம் ரகுபதி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகுபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சின்னியம் பாளையம் அடுத்துள்ள ஆர்.ஜி. புதூரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ரகுபதி (32). அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன் கோவை வந்தார். நாளை அவர் மீண்டும் அமெரிக்கா செல்ல இருந்தார். இதையொட்டி பழனி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
இதை தொடர்ந்து நேற்று இரவு 9.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு புறப்பட்டார். ஹோப் காலேஜ் அருகே சென்றபோது சவுக்குகட்டையால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு நுழைவு வாயிலில் மோதி கீழே விழுந்தார்.
அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த வாகனம் ரகுபதி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகுபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
