என் மலர்
செய்திகள்

அந்தியூர் அருகே 10 டன் ரேசன் அரிசி கடத்தல்
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பகுதியில் ரேசன் அரிசி கடத்துவதாக அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் மற்றும் போலீசார் பருவாச்சி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட டேங்கர் லாரி மற்றும் கோவை பதிவு எண் கொண்ட ஆம்னி வேன் அந்தியூர் மெயின் ரோடு வழியாக வராமல் அம்மன்பாளையம் பகுதியில் சென்றது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் டேங்கர் வந்த வழியாக சென்று அந்த லாரி மற்றும் ஆம்னி வேனை துரத்தி சென்றனர்.
சேர்வராயன் தோட்டம் என்ற இடத்தில் அந்த வாகனங்களை மடக்கி பிடித்தனர். அப்போது டிரைவர்கள் மற்றும் உரிமையாளர் தப்பி ஒடிவிட்டனர். லோடு மேன் சேர்வாரயன் பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (30) சங்கர் (28) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும் கழிவு நீரை எடுத்து செல்லும் டேங்கர் லாரியில் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து எடுத்து சென்றனர். அதில் இருந்த 10 டன் அரிசியை போலீசார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.






