என் மலர்
செய்திகள்

ஓராண்டுக்கு பிறகு வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 60 கனஅடி தண்ணீர் திறப்பு
ஓராண்டுக்கு பிறகு இன்று காலை வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 60 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் தண்ணீரின்றி வீராணம் ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கீழணையில் தேக்கி வைக்கப்பட்டது. அங்கிருந்து கடந்த 26-ந் தேதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கீழணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வந்ததாலும், ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்ததையொட்டி வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீராணம் ஏரியில் இருந்து சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வி.என்.எஸ்.மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அந்த தண்ணீர் வெள்ளாற்று வழியாக கடலில் சென்று கலந்தது. தொடர்ந்து மழைபெய்து வருவதால் வீராணம் ஏரி நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது. இன்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.05 அடி ஆகும். 45 அடிக்குமேல் வீராணம் ஏரியில் தண்ணீர் இருப்பு வைக்கக்கூடாது என்பதாலும், வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ்.மதகு வழியாக கூடுதல் தண்ணீர் திறந்து விடமுடியாத நிலை உள்ளதாலும், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஓராண்டுக்கு பிறகு இன்று காலை 6 மணிக்கு வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 60 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வீராணம் ஏரிக்கு இன்று வினாடிக்கு 160 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வி.என்.எஸ். மதகு வழியாக 100 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
வீராணம் ஏரி, கடல்போல் காட்சி அளிக்கிறது. நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் தண்ணீரின்றி வீராணம் ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கீழணையில் தேக்கி வைக்கப்பட்டது. அங்கிருந்து கடந்த 26-ந் தேதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கீழணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வந்ததாலும், ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்ததையொட்டி வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீராணம் ஏரியில் இருந்து சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வி.என்.எஸ்.மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அந்த தண்ணீர் வெள்ளாற்று வழியாக கடலில் சென்று கலந்தது. தொடர்ந்து மழைபெய்து வருவதால் வீராணம் ஏரி நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது. இன்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.05 அடி ஆகும். 45 அடிக்குமேல் வீராணம் ஏரியில் தண்ணீர் இருப்பு வைக்கக்கூடாது என்பதாலும், வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ்.மதகு வழியாக கூடுதல் தண்ணீர் திறந்து விடமுடியாத நிலை உள்ளதாலும், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஓராண்டுக்கு பிறகு இன்று காலை 6 மணிக்கு வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 60 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வீராணம் ஏரிக்கு இன்று வினாடிக்கு 160 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வி.என்.எஸ். மதகு வழியாக 100 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
வீராணம் ஏரி, கடல்போல் காட்சி அளிக்கிறது. நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






