என் மலர்
செய்திகள்

ஆவுடையார்கோவில் அருகே மாணவியை கடத்தி திருமணம்: வாலிபர் கைது
ஆவுடையார்கோவில் அருகே மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காரைக்குடியில் உள்ள பல் கலைக்கழக கல்லூரியில் பி. பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் வட பழனியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் சுரேஷ் (26). இவர் ஆவுடையார்கோவில் பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் ஒரே பஸ்சில் சென்று வரும் சுரேசுக்கும், மாணவி காமாட்சிக்கும் காதல் மலர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி மாணவியை கடத்தி திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே கல்லூரிக்கு சென்ற மகள் மாயமானது குறித்து அவரது தந்தை ஆவுடையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு மாணவி காமாட்சியை மீட்டார்.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர் ஆவுடையார் கோவிலில் உள்ள ரீக்கோ தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மாணவியை கடத்தி திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் சுரேசை கைது செய்து ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காரைக்குடியில் உள்ள பல் கலைக்கழக கல்லூரியில் பி. பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் வட பழனியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் சுரேஷ் (26). இவர் ஆவுடையார்கோவில் பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் ஒரே பஸ்சில் சென்று வரும் சுரேசுக்கும், மாணவி காமாட்சிக்கும் காதல் மலர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி மாணவியை கடத்தி திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே கல்லூரிக்கு சென்ற மகள் மாயமானது குறித்து அவரது தந்தை ஆவுடையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு மாணவி காமாட்சியை மீட்டார்.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர் ஆவுடையார் கோவிலில் உள்ள ரீக்கோ தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மாணவியை கடத்தி திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் சுரேசை கைது செய்து ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






