என் மலர்
செய்திகள்

தாம்பரத்தில் நகைச்சீட்டு மோசடி: பிரபல நகைக்கடை மேலாளர் கைது
தாம்பரத்தில் நகைச்சீட்டு மோசடியில் ஈடுபட்டதாக பிரபல நகைக்கடை மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் பிரபல நகைக்கடை உள்ளது. இங்கு 200-க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகைச்சீட்டு கட்டி வந்தனர்.
நகைச் சீட்டு பணம் கட்டும் காலம் முடிந்தும் அவர்களுக்கு நகை கொடுக்கவில்லை. இது பற்றி வாடிக்கையாளர்கள் கேட்ட போது நிர்வாகத்தினர் சரிவர பதில் கூறவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நகை கடையை 30-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் முற்றுகையிட்டு வாக்கு வாதம் செய்தனர். அவர்களை தாம்பரம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
நகைச்சீட்டு மோசடி குறித்து கடப்பேரியை சேர்ந்த நிவேதா என்பவர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைக்கடை மேலாளர் முத்துக்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் பிரபல நகைக்கடை உள்ளது. இங்கு 200-க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகைச்சீட்டு கட்டி வந்தனர்.
நகைச் சீட்டு பணம் கட்டும் காலம் முடிந்தும் அவர்களுக்கு நகை கொடுக்கவில்லை. இது பற்றி வாடிக்கையாளர்கள் கேட்ட போது நிர்வாகத்தினர் சரிவர பதில் கூறவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நகை கடையை 30-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் முற்றுகையிட்டு வாக்கு வாதம் செய்தனர். அவர்களை தாம்பரம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
நகைச்சீட்டு மோசடி குறித்து கடப்பேரியை சேர்ந்த நிவேதா என்பவர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைக்கடை மேலாளர் முத்துக்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story






