என் மலர்
செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்து தொழிலாளி பலி
ஈரோடு:
புதுக்கோட்டை மாவட்டம் கதிரம்குடி என்ற இடத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48) தொழிலாளி. இவர் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் பயணித்தார்.
இன்று காலை அந்த ரெயில் ஈரோட்டுக்கு வந்தது. அதில் இருந்து இறங்கிய அவர் திருச்சி ரெயிலில் ஏற பிளாட்பாரத்தில் காத்து நின்றார்.
திடீரென அவர் நெஞ்சு வலியால் மயங்கி கீழே விழுந்தவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை மீட்ட ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் 1-வது பிளாட்பாரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
ரெயில்வே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.