என் மலர்
செய்திகள்

தேவகோட்டையில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
தேவகோட்டையில் கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஜீவாநகரை சேர்ந்தவர் மணிமேகலை. இவரது மகள் ஜனனி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜனனி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டம் அடைந்த மணிமேகலை மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
Next Story