என் மலர்
செய்திகள்

பெருந்துறை அருகே கோழிப்பண்ணையை அகற்ற கோரி பொது மக்கள் உண்ணாவிரதம்
பெருந்துறை அருகே கோழிப்பண்ணையை அகற்ற கோரி பொது மக்கள் கோழிப்பண்ணையின் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(65) என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை பெரிய வீர சங்கிலி ஊர்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ளது.
இந்த பண்ணையில் 7 லட்சம் கோழிகள் உள்ளது. இந்த கோழியின் கழிவுகளால் தோன்றும் ஈக்கள் பெரிய வீர சங்கிலி ஊர்பகுதியில் உள்ள வீடுகள், அரசு பள்ளிகள், பால் சொசைட்டி மற்றும் கடைகளிலும் மொய்ப்பதால் பெரிதும் அவதிப்பட்ட பொதுமக்கள் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த 2008-ம் ஆண்டு இதே பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்த போது, கோழிப்பண்ணை உரிமையாளர் உறுதிமொழிப்பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார். அதில் இருந்த 2 ஆண்டுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்தது.
தற்போது இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவின் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்துப்பேச பெருந்துறை தாசில்தாருக்கு உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக தாசில்தாரின் அழைப்பை ஏற்க மறுத்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இடத்திலேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அதிகாரி அனைவரும் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியும் கோழிப்பண்ணையின் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தான மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை தாசில்தார் செந்தில்ராஜ், கோழிநோய் புலனாய்வு துணை இயக்குனர் பொன்வேல் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த கோழிக்கழிவுகளினால் பரவும் ஈக்கள் மற்றும் கொசுக்களால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு எங்களுக்கு உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் இங்குள்ள இந்த கோழிப்பண்ணைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக கோழிப்பண்ணை உரிமையாளரிடம் பேசியதில் அடுத்த 30 நாட்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் இந்த குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தொடர்ந்து இந்த பிரச்சினை இருந்தால் கோழிப்பண்ணையை தாமாகவே அகற்றி கொள்வதாக உறுதிமொழிப்பத்திரம் எழுதி கொடுத்தார்.
இதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(65) என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை பெரிய வீர சங்கிலி ஊர்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ளது.
இந்த பண்ணையில் 7 லட்சம் கோழிகள் உள்ளது. இந்த கோழியின் கழிவுகளால் தோன்றும் ஈக்கள் பெரிய வீர சங்கிலி ஊர்பகுதியில் உள்ள வீடுகள், அரசு பள்ளிகள், பால் சொசைட்டி மற்றும் கடைகளிலும் மொய்ப்பதால் பெரிதும் அவதிப்பட்ட பொதுமக்கள் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த 2008-ம் ஆண்டு இதே பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்த போது, கோழிப்பண்ணை உரிமையாளர் உறுதிமொழிப்பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார். அதில் இருந்த 2 ஆண்டுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்தது.
தற்போது இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவின் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்துப்பேச பெருந்துறை தாசில்தாருக்கு உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக தாசில்தாரின் அழைப்பை ஏற்க மறுத்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இடத்திலேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அதிகாரி அனைவரும் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியும் கோழிப்பண்ணையின் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தான மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை தாசில்தார் செந்தில்ராஜ், கோழிநோய் புலனாய்வு துணை இயக்குனர் பொன்வேல் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த கோழிக்கழிவுகளினால் பரவும் ஈக்கள் மற்றும் கொசுக்களால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு எங்களுக்கு உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் இங்குள்ள இந்த கோழிப்பண்ணைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக கோழிப்பண்ணை உரிமையாளரிடம் பேசியதில் அடுத்த 30 நாட்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் இந்த குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தொடர்ந்து இந்த பிரச்சினை இருந்தால் கோழிப்பண்ணையை தாமாகவே அகற்றி கொள்வதாக உறுதிமொழிப்பத்திரம் எழுதி கொடுத்தார்.
இதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story






