என் மலர்
செய்திகள்

கடலூரில் ஆசிட் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது - டிரைவர் படுகாயம்
கடலூரில் ஆசிட் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
கடலூர்:
சிதம்பரத்தில் இருந்து ஆசிட் நிறப்பிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்து கொண்டிருந்தது.
அந்த லாரி செம்மங்குப்பத்தில் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் டிரைவர் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும் லாரியில் இருந்த ஆசிட்டும் கசிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் லாரியில் ஏற்பட்ட கசிவை சரிசெய்து ஆசிட்டை மற்றொரு லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சிதம்பரத்தில் இருந்து ஆசிட் நிறப்பிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்து கொண்டிருந்தது.
அந்த லாரி செம்மங்குப்பத்தில் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் டிரைவர் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும் லாரியில் இருந்த ஆசிட்டும் கசிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் லாரியில் ஏற்பட்ட கசிவை சரிசெய்து ஆசிட்டை மற்றொரு லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
Next Story