என் மலர்
செய்திகள்

விருத்தாசலத்தில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளை
அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவரது மனைவி லட்சுமி (55). இவர்களது மகள் பிரியா (28). சண்முகம் விருத்தாசலம் நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ளார். லட்சுமி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இன்று காலை சண்முகம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கதவை திறந்து வீட்டினுள் சென்று பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன.
பீரோவை பார்த்த போது அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஒரு ஏ.டி.எம். கார்டு ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து சண்முகம் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
மேலும் கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் புருனே வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
நகை, பணம் கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவரது மனைவி லட்சுமி (55). இவர்களது மகள் பிரியா (28). சண்முகம் விருத்தாசலம் நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ளார். லட்சுமி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இன்று காலை சண்முகம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கதவை திறந்து வீட்டினுள் சென்று பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன.
பீரோவை பார்த்த போது அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஒரு ஏ.டி.எம். கார்டு ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து சண்முகம் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
மேலும் கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் புருனே வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
நகை, பணம் கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
Next Story






