என் மலர்
செய்திகள்

பவானி அருகே ரோட்டோரம் 15 மூட்டைகளில் போதை பொருட்கள் - போலீசார் விசாரணை
15 மூட்டைகளில் இருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பவானி, சித்தோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவானி:
பவானி அருகே உள்ள சித்தோடு - நசியனூர் பஸ் நிறுத்த பகுதியில் பைபாஸ் செல்லும் சாலை ரோட்டோரம் 12 சாக்கு மூட்டைகள் கேட்பாரற்று அனாதையாக கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இதை வேடிக்கை பார்த்து கொண்டே சென்றனர்.
சிலர் அந்த மூட்டைகளில் அப்படி என்ன இருக்கும்? என எண்ணியப்படியே சென்றனர். ஆனால் அதன் அருகே சென்று மூட்டையை பிரித்து பார்க்க முன் வரவில்லை.
இது பற்றி பவானி போலீசுக்கு தகவல் பரவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அந்த மூட்டைகள் ஒவ்வொன்றையும் பிரித்து பார்த்தனர்.
ஒவ்வொரு மூட்டையிலும் பான்பராக், ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இந்த புகையிலை போதை பொருட்களை யாரோ நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் போட்டு சென்றது தெரியவந்தது.
இப்படி போதை பொருட்கள் மூட்டைகளை ரோட்டில் வீசி சென்றது யார்? உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரை சேர்ந்தவர்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி அருகே உள்ள சித்தோடு - நசியனூர் பஸ் நிறுத்த பகுதியில் பைபாஸ் செல்லும் சாலை ரோட்டோரம் 12 சாக்கு மூட்டைகள் கேட்பாரற்று அனாதையாக கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இதை வேடிக்கை பார்த்து கொண்டே சென்றனர்.
சிலர் அந்த மூட்டைகளில் அப்படி என்ன இருக்கும்? என எண்ணியப்படியே சென்றனர். ஆனால் அதன் அருகே சென்று மூட்டையை பிரித்து பார்க்க முன் வரவில்லை.
இது பற்றி பவானி போலீசுக்கு தகவல் பரவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அந்த மூட்டைகள் ஒவ்வொன்றையும் பிரித்து பார்த்தனர்.
ஒவ்வொரு மூட்டையிலும் பான்பராக், ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இந்த புகையிலை போதை பொருட்களை யாரோ நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் போட்டு சென்றது தெரியவந்தது.
இப்படி போதை பொருட்கள் மூட்டைகளை ரோட்டில் வீசி சென்றது யார்? உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரை சேர்ந்தவர்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






