என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை நீர்மட்டம் 54 அடியை நெருங்கியது
    X

    பவானிசாகர் அணை நீர்மட்டம் 54 அடியை நெருங்கியது

    தண்ணீர் வரத்து அதிகரிப்பால், பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை 53.60 அடியாக இருந்தது. இன்று மாலைக்குள் அணையின் நீர் மட்டம் 54 அடியை தொட்டுவிடும்.
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 54 அடியை நெருங்கியது

    தண்ணீர் வரத்து அதிகரிப்பால், பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை 53.60 அடியாக இருந்தது. இன்று மாலைக்குள் அணையின் நீர் மட்டம் 54 அடியை தொட்டுவிடும்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக கணிசமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் சாரல் மழையையொட்டி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணி நிலவரப்பபடி அணைக்கு வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்கு ஆற்றுக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை அணையின் நீர்மட்டம் 53.60 அடியாக இருந்தது. இன்று மாலைக்குள் அணையின் நீர் மட்டம் 54 அடியை தொட்டுவிடும்.

    அணைக்கு ஓரளவு தண்ணீர் வருவதையொட்டி கீழ்பவானி வாய்க்காலுக்கு உயிர்நீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள், பா.ம.க, த.மா.கா. உள்பட பல்வேறு கட்சியிரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இப்போதைக்கு தண்ணீர் இருப்பு குடிநீருக்கு பிரச்சனை இருக்காது. வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென்றால் அணையின் நீர்மட்டம் குறைந்தது 70 அடியாக இருக்க வேண்டும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.
    Next Story
    ×